செவ்வாய், 19 மே, 2015

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு துணைக் கோள்கள் உண்டு என்பது கெப்ளர் கருத்து.மார்ஸ் என்பது கிரேக்கக் கடவுளின் பெயர்.அவரது உதவியாளரான போபாஸ்,டெய்மாஸ் என்ற பெயரையே அவ்விரு துணைக் கிரகத்திற்கும் வைத்துவிட்டனர்.செவ்வாய்க் கிரகத்திற்குரிய அரிசியாமன்ஸ் என்ற இடத்திலே 7 பாதாளக் குகைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்தக் குகை வ்வொன்றும் 1 மீட்டர் முதல் 252 மீட்டர்வரை விட்டம் கொண்டதாக இருக்கிறது. டினோ,கோலியோ,வெண்டி,ஆனி,அபே,நிக்கி,ஜீனி எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
செவ்வாயின் மத்தியரேகைக்கு அருகில் 20 கிலோ மீட்டர அகலமுள்ள ஏரி இருந்துள்ளது.3 பில்லியன்(100 கோடிகள் சேர்ந்தது ஒரு பில்லியன்)ஆண்டுகளுக்குமுன் பனிப்பாறைகள் உருகி இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும்.பூமியிலிருந்து 10 கோடி மைல் தொலைவில் செவ்வாய் கிரகம் உள்ளது.நன்றி-வி.சாரதா
விண்வெளியில் கரும் புள்ளி இருப்பதாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.அதற்கு ஐன்ஸ்டீன் விதிகள் ரு காரணம். பூமி சுருங்கும்போது அதில் உள்ள மாலிக்யூல்கள் ,அணுக்கூட்டங்கள் அருகில் வந்துவிட,இதன் ஈர்ப்புசக்தி அதிகரிக்கும்.இவ்வாறு புரோட்டானும்,எலக்ட்ரானும் முண்டியடித்து முன்னேறுகையில் பாரம் தாங்காத கிரகம் நட்சத்திரமாக ஒரு கிரகத்தின் எடை அடர்த்தி கூடிவிட்டால் அதன் வேகம் தாஙகாமல் எரியும்.இந்த நிலையில்தான் சூரியன் இருக்கிறது.சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் தீர்ந்து கன்றிப்போகும்போது வெண்மையாக மாறி பின் கறுமையாக மாறி உயிரை இழக்கும்.
இட நெருக்கடி ஏற்பட்டு  எலக்ட்ரான்,புரோட்டான் கலந்து ஒரு சுழலும் நியூட்ரான் நட்சத்திரமாக மாறிய பின்பு அந்த நட்சத்திரத்திற்கு பூமியில் இருப்பதைப்போல லட்சக்கணக்கான மடங்கு ஈர்ப்புவிசை அழுத்தம் அதனுள் இருக்கும் துகள்களின் வேகம் அதிகரித்து ளியின் வேகத்தைத் தொட்டுவிடும்.ஐன்ஸ்டீன் விதிப்படி அதன் அளவு புள்ளியிலும்,புள்ளியாகச் சுருங்கி அதன்மேல் நின்று சடாரென்று கரும் புள்ளியாக மாறும்.
சூரியக் காற்று மின்னூற்றம் பெற்ற புரோட்டான்,எலெக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.இவற்றுடன் சிறய அளவிலான எடை கூடிய நியூக்ளியஸ் மற்றும் சூரிய காந்தப் புலனைக் கொண்டிருக்கும்.இவை சூரியனிடமிருந்து சுற்றுச் சூழலுக்குப் பரவுகின்றன.சூரியனிடமிருந்த கரோனாவிிலிருந்து பரவும் வெப்பம் கோள்களுக்கிடையே பரவும்.இதையே சூரியக்காற்று என்கிறோம்.இது சாதாரணமாக 1,00,000 ஒரு நொடிக்குச் சுமார் 500  கி.மீ வேகத்தில் வெளியேற்றுகிறது.இதில்  உள்ள துகள்கள் பூமியை வந்தடைய கூமார் 5 நாட்கள் ஆகலாம்.சூரியனின் சுழற்சி,காந்தப்புலன் ஆகியவற்றைப் பொறுத்து இது சுருள் வடிவத்தில் பயணிக்கிறதாம்.(வி.சாரதா)

                                            சூரியனின் எதிர்காலம்


சூரியனின் அணுக்கரு சமநிலை ஒருநாள் சீர்குலைவது நிச்சயம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முழுவதும் அப்போது ஹீலியமாக மாறிப்போகும் சூழ்நிலை குலைந்து நிற்கும் முயற்சியில் அதன் மையப்பகுதி ஹீலியத்தை எதிர்த்து ஜீரணம் செய்யத் துவங்கும். அது சமயம் வெப்பம் அதிகமாகும். சூரியன் சிவக்க ஆரம்பிக்கும்.சூரியனின் பருமன் அதிகமாகி அது ஒரு சிகப்பு நட்சத்திரமாகப் பருக்கும்.சூரியன் அருகில் உள்ள வெள்ளி,புதன் போன்ற கிரகங்கள் உருகிச் சூரியனுடன் கலந்துவிடும்.அதற்கள் பூமியில் உயிரினங்கள்  மறைந்துவிடும். கடல்கள் கொதித்து ஆவியாகி அடித்தளங்களில்  பாறைகள் அல்லது நிலப்பகுதி பொரிந்து போகும்.அதன்பின்னர் சூரியனின் வளர்ச்சி நின்றுபோகும்.அதன்பின்னர் வெள்ளைக்குள்ளன் வகையைச் சார்ந்த பூமி இருக்கும் அளவிற்குச் சிறியதாகிவிடும்.அதற்குமேல்,மீதியுள்ள ஹீலியத்தையும் எரித்தபிறகு சூரியன் வெறும் கரிக்கட்டையாகி உருண்டை வடிவில் மிஞ்சும்.அதுதான் சூரியனின் இறுதி நிலையாகும்.இது 500கோடிஆண்டுக்கு மேல்தான் நிகழும் என்று கூறுகிறார்கள்.நன்றி,வி.சாரதா